Sunday, June 12, 2011

வெற்றிடம் ..

எந்த வெற்றிடமும் ஏதோ ஒன்றை சுமந்துகொண்டிருக்கும்.
நம் உயிரினை சுமக்கும் ஏதோ ஒன்றினை போல ..
நிரப்பப்பட்ட வெற்றிடம் - அங்கு
அத்தனையும் காலாவதியானது .
மீண்டும் பயன்படாது .
காலம் சென்ற பின் கடவுள் மன்னிப்பு தருவார்.
அவர் மிகவும் நல்லவர்.
நாம் எந்த பாவமும் செய்யலாம்.
அவர் என்ன செய்வார் - பாவம்
வெறும் கடவுள் தானே ..???
இறபதற்கு முன் ஒரே ஒரு முறை
அழுதுவிடுவோம் .
அது போதும் நம் பாவத்திற்கு - ஏனென்றால்
நாமும் கடவுள் தானே - பாவம்
மனிதர்கள் என்ன செய்வார்கள்.
இனி நாமும் மன்னிப்பு தரலாம்.
எந்தவொரு பாவத்தினையும்
ஏற்றுக்கொள்ளலாம்.
இது வெற்றிடம் - இங்கு
எதுவுமே இல்லை.
ஏதோ ஒன்றினை தவிர - மீண்டும்
அத்தனையும் காலவதியாகும் - ஆனால்
இனி அத்தனையும் பயன்படுத்தப்படும்.




நெடுஞ்சாலை புத்தன் ...

நடக்கப்பழகிய காலம் முதல் - இன்று
நடந்துகொண்டிருக்கும்  காலம் வரை ..
அந்த மனிதனை கடக்காமல் - எந்த
சாலையும் முடிவுற்றதில்லை .
எந்த பேதமுமின்றி  ஒரே  சிரிப்பு
அனைவரிடத்திலும் ..
மயிர்களுக்கிடையே சுருங்கிப்போயிற்று
அவனது முகம் .
அது அவனது அடையாளம் .
வறுமை சிரிப்பும்
தூய்மையற்ற  சுவாசமும்
அவனை இயக்குகிறது .
உலக பொருளாதாரமும்  , தனி மனித சோறும்
அவனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அவன் ஒரு நெடுஞ்சாலை புத்தன்.
எந்த மரமும் அவனுக்கு தேவையில்லை.
பலரது ஞானம் அவனது மௌனத்தில் அடங்கிவிட்டது.
அவனது மரணம் பலரது பாவத்தால் முடிந்துவிட்டது.
நம்முடைய மரணம் அவனது சாலையை கடந்துபோகின்றது.

Saturday, June 11, 2011

முடிவுற்ற முழுமை.

தன் நிழலுக்கு உயிர் தந்து
பறக்கவிட்டது  பறவை.
நிஜம் கண்ட பொழுது
அதுவும் நிழலாகி போனது .

Monday, June 6, 2011

அந்தரத்தில் மிதக்கும் ஆகாயம் ,....

அந்தி தேய்ந்து இருளப்பி பொருள் கொண்டது இரவு..
இருள் நிழல் தேட   தவம் கொண்டது ஒளி..
விடிந்துவிட்டதாய் எண்ணியவை - இன்னும்
விடியவில்லை..
கடந்துபோன இருளிற்கு உயிர் வந்தது
அதன் நிழலில்..
இருள் பூசி ஒளிருது வானம்.
அதன் நிறம் கண்டு வெடித்தது மோகம்.
அந்தரத்தில் மிதக்குது ஆகாயம்.
அதை தீண்ட நீளுது நீட்சி .
மின்னலாய் வளையுது புருவம் .
கண்கள்   கொண்டு  விடியுது  உடல்.
ஆழ்நிலை தியானம் கொள்ளுது ஆன்மா.
அதன் பொருளற்ற  மேன்மை இருளாய் படர்ந்தது.
வீழ்ந்துகொண்டே இருக்குது  இரவு
தொலைந்து போன குழந்தையாய் அழுகிறது  இருள்.
கைவீசி அழைக்குது  அந்தி வானம்
கைவிலகி சென்றது மர்ம ஒளி - இங்கு
விடிந்துவிட்டதாய் எண்ணியவை இன்னும்
விடியவில்லை - அது
அந்தரத்தில் மிதக்குது ஆகாயமாய் .