Friday, October 26, 2012

ஸ்ரேயா கோஷல்..!!!!!


இவள் ராகம் கலந்த
பூவின் இதழ்..!!

ஸ்வரங்கள் சேர்ந்த
மழையின் துளி..!!

இவள் மூங்கில்மேல்
அமரும் பனித்துளி..!!

தாகம் தீர்க்கும்
இசையின் மழை..!!

இவள் குருவிகள் குளிக்கும்  
வானவில் அருவி..!!

பூக்கள் சூடிய
கூந்தல் அருவி..!!

இவள் வங்காள மண்ணின்
கீதம்..!!

இவள் தேன்குரல்
கூறும் மீதம்..!!

சுடிதார் அணிந்த
குயில் இவள்..!!

தென்றல் சுமக்கும்
குழந்தை இவள்..!!

தேநீர் அருந்தும்  
தேவதை இவள்..!!

 காற்றை இசைக்கும்
சிறகு இவள்..!!

 அடர்ந்த வனத்தில் – ஓர்
இலை இவள்..!!

ஆளில்லா சாலையின்
அமைதி இவள்..!!

மழைக்கால மயிலின்
தோகை இவள்..!!

இவள் பாட
பனித்துளி சிலிர்க்கும்..!!

பூ பேசும்
வார்த்தையெல்லாம்
ஸ்ரேயா பேச கண்டேன்..!!

ஸ்ரேயா பாடிய பாட்டிலெல்லாம்
தேகம் சிலிர்க்க நின்றேன்..!!

உனக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்குமடி  
ஒரு முறை கேட்ட நொடி உன்னையும் பிடித்ததடி..!!

பூவை ரசிப்பது ஓர் இன்பம்
பூ பாட ரசிப்பது பேரின்பம்..!!

ஒரு முறை உனை கண்டு
என் பெயர் சொல்லச் சொல்வேன்..!!

பிறவிப் பயன் போதுமென்றே
கல்லறை நோக்கி நான் செல்வேன்..!!

ஸ்ரேயா ஓ ஸ்ரேயா.....

Thursday, October 25, 2012

ஆதாம் : ஆப்பிள் : ஏவாள்


உன் கூந்தல் இலையால் பெண்ணே
உந்தன் பூவை கொஞ்சம் மறைக்காதே..!!

தேகம் பருகும் வேளையில்
நீயும் தேநீர் பருக அலையாதே..!!

களவு செய்யாமல் இருளுக்கு
அர்த்தம் இல்லையடி..!!

காதல் இல்லாமல் கண்ணே
கடவுளும் இங்கே தொல்லையடி..!!

பூவின் நிழலில்
தேன் இல்லையடி..!!

நீ ஒளிந்து கொண்டால்
காதல் இல்லையடி..!!

நம் கண்கள் கொண்டே
விடிந்து விடுவோம்..!!

சூரியன் விழிப்பதை
தடுத்து விடுவோம்..!!

குறைந்த ஒளியில்
தேடல் செய்வோம்.!!

கூடிய வரையில்
காதல் வளர்ப்போம்..!!

ஆப்பிள் கடித்த ரகசியத்தை
அந்த ஆதாம் மட்டும்தான்
அறிவானா..!!?

இந்த ஆதாம் அறிந்திட
நினைக்கும் போது
ஏவாள் நீயும்
தடுப்பாயோ..!!?

இது ஆப்பிள்
உலகம் பெண்ணே
பல JOBS கள் இருக்குது
முன்னே..!!

APPLE  PRODUCTS
APPS..ம் நீ..!!

அந்த APES கள்
தொடங்கிய காதலும் நீ..!!

கண்ணே வா வா - இது
பொற்காலம்..!!

மீண்டும் செல்வோம்
அந்த கற்க்காலம்

கண்கள் தீட்டி
தீ வளர்ப்போம்..!!

நம் காதல் கூட்டினில்
சிசு வளர்ப்போம்..!!

வா வா பெண்ணே முன்னாடி
உன் தேகம் எனது கண்ணாடி..!!

நீ connecting செய்யும் NOKIA
உன்னால் என்னுள் PHOBIA..!!

உன் கூந்தல் இலையால் பெண்ணே
உந்தன் பூவை கொஞ்சம் மறைக்காதே..!!























Monday, October 22, 2012

கையளவு நெஞ்சத்தில..!!!


ஆட்டுக்கல்லு தண்ணியில
அழுக்கான நிலா..!!

நெல்லு குத்தும் ஆளுக
நேத்து மொத காணல..!!

நிலா சோறு சாப்பிட கொழந்த
இன்னும் பொறக்கல..!!

வானம் பாத்து கெடக்குறான்
போதகார மாரி..!!

மும்மாரி பொழிஞ்ச பின்னும்
எழல இந்த மாரி..!!

நேத்து வச்ச மீன் கொழம்பு
ஊரு எல்ல தாண்டுது..!!

கோவிச்சிக்கிட்டு போன தாரம்
கொழந்தையோட திரும்புது..!!

கோவணத்த அலசுறாரு
கோணக் காலு கோவிந்தன்..!!

கோக்கு மாக்கு பண்ணுறாரு
ரெண்டு தாரம் கோவாலு..!!

சமஞ்ச பொண்ணு செவப்பா
செவந்து கெடக்குது வானம்..!!

ஊரு பெருசு மீச முறுக்கி
உம்முனுதான் பாக்குது..!!

கொஞ்சம் பொழுது சாயும் வேளையில
வேட்டி சரிய ஆடுது..!!

ஆட்டம் முடிஞ்சி படுக்கையில
ஆந்த சத்தம் போடுது..!!

அழுக்கான நிலா இப்ப
ஆகாசத்துக்கு போகுது..!!

விடிய விடிய ஆட்டம் போட்டும்
மீதம் கொஞ்சம் இருக்குது..!!

அடுத்த நாளு தொடர சொல்லி
நாயும் மூஞ்ச திருபுது..!!

நெல்லும் குத்தும் சத்தத்துல
நெனவு கொஞ்சம் திரும்புது..!!

திரும்பி வந்த சம்சாரம்
என் மடியில கெடக்குது..!!

வேலைக்கு கெளம்பும் போது  
சோறு வாட தூக்குது..!!

சிறுவாட்டு காசு இப்ப
கோழியா தொங்குது..!!

எப்புடித்தான் வாழ்ந்தாலும்
எட்டு காலு வாகனம் – அந்த
எட்டு காலு வாகனத்துல
எல்லாருமே போகணும்..!!

X கவிதை


நீ தீண்டாத என் உடல் – இன்னும்
பிறக்கவில்லை..!!

நீயில்லா இரவு – இன்னும்
விடியவில்லை..!!

காற்றின் கருவறையில் தங்கிக்கொண்டது
நீ பேசிய மௌனங்கள்..!!

கனத்த மனதின் காற்று
கர்ப்பிணி போல நடக்கிறது..!!

வானின் பிம்பம் விழுந்து
கடல் வானமானது..!!

நிலா ஒருபோதும்
நீரில் நனைவதில்லை..!!

நனையாத நிலவை
படகும் சுமப்பதில்லை..!!

நேற்றிரவின் மழை ஏதோ ஒன்றை
தூவியது..!!

மழை நின்றபின்
வானமே விழுந்தது..!!


காரணமின்றி அழுகிறது
பேசப்படாத வார்த்தைகள்..!!

காரணத்தோடே அழுகிறது
உனக்கான முத்தங்கள்..!!

ஞாபகச் சேற்றில்
விதைந்துக் கிடக்கிறோம்..!!

நாளையின் மீதொரு நம்பிக்கை வைக்க
நாளையின் முடிவில் வருவாயா !?