ஆட்டுக்கல்லு தண்ணியில
அழுக்கான நிலா..!!
நெல்லு குத்தும் ஆளுக
நேத்து மொத காணல..!!
நிலா சோறு சாப்பிட கொழந்த
இன்னும் பொறக்கல..!!
வானம் பாத்து கெடக்குறான்
போதகார மாரி..!!
மும்மாரி பொழிஞ்ச பின்னும்
எழல இந்த மாரி..!!
நேத்து வச்ச மீன் கொழம்பு
ஊரு எல்ல தாண்டுது..!!
கோவிச்சிக்கிட்டு போன தாரம்
கொழந்தையோட திரும்புது..!!
கோவணத்த அலசுறாரு
கோணக் காலு கோவிந்தன்..!!
கோக்கு மாக்கு பண்ணுறாரு
ரெண்டு தாரம் கோவாலு..!!
சமஞ்ச பொண்ணு செவப்பா
செவந்து கெடக்குது வானம்..!!
ஊரு பெருசு மீச முறுக்கி
உம்முனுதான் பாக்குது..!!
கொஞ்சம் பொழுது சாயும் வேளையில
வேட்டி சரிய ஆடுது..!!
ஆட்டம் முடிஞ்சி படுக்கையில
ஆந்த சத்தம் போடுது..!!
அழுக்கான நிலா இப்ப
ஆகாசத்துக்கு போகுது..!!
விடிய விடிய ஆட்டம் போட்டும்
மீதம் கொஞ்சம் இருக்குது..!!
அடுத்த நாளு தொடர சொல்லி
நாயும் மூஞ்ச திருபுது..!!
நெல்லும் குத்தும் சத்தத்துல
நெனவு கொஞ்சம் திரும்புது..!!
திரும்பி வந்த சம்சாரம்
என் மடியில கெடக்குது..!!
வேலைக்கு கெளம்பும் போது
சோறு வாட தூக்குது..!!
சிறுவாட்டு காசு இப்ப
கோழியா தொங்குது..!!
எப்புடித்தான் வாழ்ந்தாலும்
எட்டு காலு வாகனம் – அந்த
எட்டு காலு வாகனத்துல
எல்லாருமே போகணும்..!!
No comments:
Post a Comment