Tuesday, February 22, 2011

மரணவீதி !!!


ஒரு குழந்தையை  முத்தமிடுவதன் மூலம்
எனது மனச்சுமை சிறிது குறையலாம்..
?

அதற்க்கான தருணம் இன்றுவரை

வாய்க்கவில்லை..


அது நிகழும் என்றும்

நம்பிக்கை
  இல்லை..

நான் வளர்ந்துவிட்டதாகவே -
இந்த
சமூகம் சொல்கிறது ..


உனக்கு அறிவில்லையா - என்று

எவரேனும் கேட்டு விட்டால் ..
?

முத்தமிடுவதற்கு
  அறிவு
தேவையில்லை
  என்பதை
எப்படி நான்
உணர்த்துவேன்..?..

ஏதோ ஒரு உதடோ ..? - இல்லை
ஆண்மையோ ..? பெண்மையோ ..?
எது தேவை ..?
எனக்கு இவையெல்லாம் இல்லை .
முத்தமிட ஏதோ ஒரு காரணம் போதும்.
அது  மரண வீதியின் கடைசி
விருப்பமாகவும்  இருக்கலாம்.
இன்று தொடங்கும்  வாழ்கைக்காக..!
அன்றே முடிந்துவிட்ட
  அமைதிக்காக..!
மீண்டும் குழந்தையென
  அம்மாவிடம்  அடம்பிடிக்க ..!
இப்படி அவரவர் விருப்பம்

எதுவாகவும் இருக்கலாம் ..

நீங்கள் மரண வீதியில்
  பயணிக்க உள்ளீர்கள் ..
அது நீங்கள் விரும்பும்
  முத்தத்தை - உங்களுக்கு
கொடுக்காமலும்
  உங்களிடம் பெறாமலும் போகலாம்..!
இன்று முடிவதற்குள் ஒரே ஒரு

காரணத்தை
  தேடிச்செல்லுங்கள் ..
அது மரணவீதியில் உங்களின்
  கடைசி
முத்தமாகவும் இருக்கலாம்.

இல்லை -
உங்கள் மரணத்தை
எவரேனும் முத்தமிடலாம் .

எது நிகழ்ந்தாலும் - அது

பிறவிப்பயனே ..!!!

 


Wednesday, February 16, 2011

அன்பிற்க்கும் உண்டோ...?

இங்கே காதலெனப்படுவது ...?
மரணமோ ..?- இல்லை
மனப்பிறழ்வோ...?
அன்று முளை விட்ட  மோகமோ ..?
இன்றைய அயல்நாட்டு  ஆர்வமோ.. ?
ஏதேனும் ஒன்று காதல் எனப்படும்.
அது சாலையோர  நட்பாகலாம் .
நடுநிசி நாடகம்  எனலாம் .
நான் நீயென சொல்லலாம் .
நீ இல்லை வாழ்வில்லை  எனலாம்.
என் வருவாய் போதுமெனப்படலாம்.
எனது தனிமை  பிடிக்காமல் போகலாம்.
உடல் தீண்டவே ஆர்வம் - இருந்தும்
உண்மை காதலென பேசப்பிடிக்கலாம் .
எனது கனவுலகம் கசப்பாகிப்போகலாம் .
உனது யோகத்தில் நான் பொருந்தாமல் போகலாம்.
அன்று செய்தது தவறு என்று பேசலாம்.
நான் சரியா என்றும் யோசிக்கலாம் .
எவரேனும் உனை நேசிக்கலாம் .
அதில்  யாரென முடிவு செய்யலாம்.
ஏதேனும் ஒன்று  நிச்சயம் நிகழ்ந்தாகவேண்டும்.
அது உன் குழந்தைக்கு என் பெயராகவோ ..? - இல்லை
என் திருமணத்திற்க்கு உனை அழைப்பதாகவோ ..?
எது நிகழுமோ.. ? நிகழாதோ.. ? -ஆனால்
முற்றும் முடிந்திருக்கலாம் .. ?
ஏதேனும் ஒன்று நிகழும் வரை ..

Tuesday, February 15, 2011

உயிர் மழை ..

விரட்டியடிக்கப்பட்ட  நாயென - என்
வீடு தேடி வந்தது நன்றியுள்ள மழை...

எரியும் பிணமென 
விறைத்து விழுந்தது என் மனதில் ..

எத்தனை முறை வீழ்ந்த  பின்னும் - இன்னும்
அரசனாகவே  என் மழை ..

உனை முழுதாய் முத்தமிட
எண்ணிய நாளில் நான் சிறுவனாக இருந்தேன் ..

இன்றும் நீ அதே மழையாக இருகின்றாய் - நான்
அதே சிறுவனாக  இல்லை ..

ஆடை களைந்து உனை சூடிக்கொள்ளவே விருப்பம் - ஆனால்
சட்டையனியவே சாபம் பெற்றேன்...

என்றேனும் ஒரு நாள் என்னுள்  உயிரென
உயிரணுவாவாய் -அன்று
யாரோடு புணர்ந்து உனை மீண்டும்
புனிதமென  ஜனிக்கச்செய்வேன்..

நிச்சயம் மனிதரோடு அல்ல .
கடவுளோடும் அல்ல .
வழியேதும் இல்லையெனில்
நானே  உனதாவேன் .
அன்று நான் மனிதனாக இருக்கமாட்டேன் .

பிறக்காத உயிரணு நாம் ..
இறந்தபின்  அமைதியும் நாம் ..
இப்படி யாதுமாகி நாம் ..

ஒரேயொரு  அச்சம்  மட்டுமே எனக்கு ....?

மானிடரே  மழையோடு நான்  கொண்ட
உறவை கள்ளத்தொடர்பென பேசாதீர் ...

Saturday, February 12, 2011

எதற்காக அவள் ?

அவளைச்சுற்றி எப்பொழுதும் மீசைகளின் ஆரவாரம்
கறைபடிந்த பற்களுடன்  சாராய நெடியுடன்
அர்த்தம்கொண்ட சிரிப்புடன் வீரியம் கொண்ட பார்வையுடன்
என்றேனும் நிகழ்ந்து விடும் என்ற ஆசையில்
ஏதேனும் நிகழாதா என்ற தவிப்பில் ...
இப்படி அவளைச்சுற்றி எப்பொழுதும் ஆரவாரம் -
அவள் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை
தன்னருகே வீழ்ந்திருக்கும் வயோதிகனுக்கு
தேநீர் தராமல் அவள் இருந்ததே  இல்லை -
அவன் உணர்சிகள் இல்லாதவன் என்றே தோன்றியது .
ஒரு வேளை அவளின் உணர்ச்சிகள் மடிந்திருக்கலாம் .
கர்பப்பை  இல்லாமல் இருக்கலாம் ;
இல்லை பிறப்புறுப்பில்  எந்த தேவ...  மகனோ வெடி வைத்திருக்கலாம் .
கம்பி வேலியில் தனது அண்டம் அடைபட்டிருக்கலாம்,
எதுவேண்டுமானாலும் இங்கு நிகழும் ...
எத்தனை முறை அவர்களால் பிணத்துடன்  புணர முடியும் ..
அவள் அப்படித்தான் தன்னை உணர்ந்தாள் .
இருபினும் எதற்காக அவள் காத்திருக்கிறாள் ?
நமக்கு செய்திகள் மூலமாகவே அவை வந்து சேரும் .....
வேறென்ன செய்துவிட முடியும் அவளால் ?
நிச்சயம் என்றாவது ஒரு  நாள் நமக்கு சேதி வரும்...
அன்று தயவு செய்து எந்த ஆண்மகனும்
அவளது  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதீர் ....






Friday, February 11, 2011

காதல் எனும் உரையாடல்


ப்ரியமே ..?
ம்ம்ம்ம்ம்ம்ம்..?
இந்த உலகத்திலேயே நீதான் பேரழகின்னு
நான் எப்பயாவது சொல்லி இருக்கேனா ?
ம்ம்ம்ம் நிறைய தடவ .
அப்படியா ?
ஆமா .ஏன் இப்ப இந்த சந்தேகம்?
ஒன்னும் இல்ல .
சொல்லு ?
ம்ம்ம்ம் நான் அப்பா குடிச்சி இருந்தனா ?
எனக்கு நினைவில்ல ?
நினைவு இல்லாம போகும் ?ஆனா
வாடை அடிசுருக்குமே ?
ம்ம்ம்ம்ம்ம் எனக்கு வியர்வை நாற்றம் தான்
அடிச்சது ?
அப்டீனா அப்போ நாம செக்ஸ் வட்சிகிட்டமா ?
செக்ஸ் இருந்தாதான் வேர்வ வரும்னு எந்த
பெரும் ஞானி சொன்னது உனக்கு ?
இல்ல ...ஒரு சந்தேகம் ?
எனக்கு சந்தேகம் தீர்ந்து போச்சி ?
என்ன ?
சத்தியமா அப்போ நீ குடிச்சி தான் இருந்த .
கல்யாணத்துக்கு முன்னாடி தப்பில்லையா?
எது ?
வட்சிகிட்டா ?
கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வே தப்புதான் .
அப்போ நான் யாரு?
நீ ஒரு கோடி ஹார்மோன் , நான் பலகோடி சங்க இலக்கியம் ?
எனக்கு புரியல ?
லைப்ரரில புக் எடுத்து தர  உன்ன லவ் பண்ணா
உனக்கு எப்படி புரியும் ?
என்ன அசிங்கபடுதிரியா ?
நான் முட்டாளா?
காதல்ல  முட்டாள் தனம் தான் நல்லா  இருக்கும் .
அப்போ எனக்கு எதுக்கு சங்க இலக்கியம் தேவ ?
நான்  அப்படி சொல்லல ?
அப்போ ஏன்  ஏன் கூட பழகுற ?
ஏன்னா .....?
என்ன  பேரழகின்னு நீ மட்டும் தான்
கூப்பிட முடியும் .அதுக்காகதான் ..
போதுமா என் செல்லமே ?
cut cut cut...
madam இந்த இடத்துல ரென்னு dialogue விட்டுடீங்க ?
அவன் ஏன்னு கேட்ட பிறகு
நீங்க எனக்கு பசலை நோய்னா ?என்னனு
தெரியனும் அதுக்காகதான்  love னு நீங்க
சொல்லனும் மேடம் ?
ok ok ok sir
FIRST டைம் பெர்பெக்ட் தமிழு பேசுது  இல்லையா
அதான் கொஞ்சும்  பயந்துட்டேன்
டபிங்க்லே  சரியாய் பேசுற பொண்ணா ?
போடுங்கோ சார் ?
இந்த DIALOGUE MEANING மட்டும் கரெக்டா
சொல்லிடீன்கன  நான்  MISTAKE பண்ணது?சார்
ஓகே ஓகே ஓகே
One More ...
Camera : Rolling
Action.....
ப்ரியமே ?
ம்ம்ம்ம் ?







 


Wednesday, February 9, 2011

ஏதேனும் நிகழ்ந்தால் நன்று

ஆழ்ந்த உறக்கத்தில் நிர்வாண ஞானத்தை
உணரும்   பொழுது அடி வயிற்றை கடித்திடும்
கொசுவினை வன்கொலை செய்திட -

சாராய நெடியும் காமமும் கொண்ட
கவிதைகளை இடைகால தடை செய்திட -

சிறுகதை வாசிக்கும் வேளையில் சிறுநீர்
வருவதை தடுத்திட -

மலம் கழிக்கும் முன் - தேநீர்
பருகுவதை  நிறுத்திட -

அப்பாவின் சிகரெட்டை  தினமும்
திருடுவதை  மாற்றிட -

அம்மாவின் அழுகைக்காக ஏதேனும்
 ஒரு வேலைக்கு செல்வதை  மறந்திட -

தங்கை என்று  அறிமுகம் செய்யும் நண்பனிடம்
ஏதேனும் உளறாமல் இருந்திட -

நான் காற்று வெளி  அற்பம்  நிலையானவன்
தீபம் இருள் என்று பிதற்றுவதை  சகித்திட -

ஒருமுறையேனும்  தவறுக்காக  அழுதிட -

வீழ்ந்த பின்னும் வாழ்வதற்கு - ஒரு
வழியேனும் தோன்றிட

இதை எழுத்தும் வேளையில் எவரேனும்
படிக்காமல் இருந்திட -

ஏதேனும் நிகழ்ந்தால்- நன்று
என்  ஆவியே !
என் அண்டமே !

Monday, February 7, 2011

என் செய்தால் தீரும் ?

என்ன செய்ய இயலும் -சாலையோர
சக நண்பனை பார்க்கையில்,
உலகமயமாக்கலை  எண்ணி -ஒரு கவிதை
எழுத இயலும் -வேறென்ன
புடிங்கிவிட முடியும் என்னால் ?
அவனருகே அமர யோசிக்கும்
அற்ப மானிடர் தானே நாம் .
எவனோ விதைக்கின்றான் விதையை
எவனோ அமர்கின்றான் நிழலில்..
தனியொரு மனிதனுக்கு உணவில்லை ..
இன்றுவரை இந்த ஜகத்தை அழிக்க முடியவில்லை
ஏன் பாரதி கவிதையோடு அன்றே மறைந்து போனாய்?
எதை சொல்லி இந்த வலிகளை முடிவு செய்வேன் ?
மனநோயாளியாக இருந்தால்
இவ்வலி குறையுமா ?
நிறைய உண்டு மீதம்  -எதை சொல்லி
இங்கு முடிப்பேன் ?
மண்டியிட்டு  கேட்கின்றேன்
மரணமே !!
எனை தழுவிச்செல்..