Sunday, June 17, 2012

புல்லின் நுனி 
ஓர் பனி 
வானத்து பிம்பம் 
அதை பார்க்கும் நீ !
உனை பார்க்கும் நான் !
நமை பார்க்கும் காதல் !

Wednesday, June 6, 2012

வினா வெளியில் ஓர் இரவு !


காதலோடும் காதலியோடும் 
வருகிறேன் கடலே !

நின் சப்த சிணுங்களில் 
சிணுங்கினாள் என் சிநேகிதி !

என் காதலி தீண்டலில் 
நீ சப்தமற்று போனாய் 
என் செவிகளில் !

புருவம் உயர்த்தி 
நிலவை காட்டினாள் !

அவள் கால்விரல் பிடித்து 
கூச்சம் கூட்டினேன் !

கன்னம் கிள்ளி 
காதல் பேசினாள் !

அவள் கன்னம் முழுதும்
காதல் பதித்தேன் !

நீண்ட இரவொன்று அவள் 
கண்களில் தெரிந்தது !

அவள் கண்கள் கொண்டே 
என் உடலும் விடிந்தது !

இப்படி நிகழ்ந்து கொண்டே இருக்குது 
மர்மமும் மாயையும் 
இடைவெளி இல்லா அலை போல !

ஒரு போதும் 
தீர்ந்து போவதில்லை 
கடலும் காதலும் ........

அடர்ந்த வனத்தில் ஓர் இலை ....


எதிர்ப்படும் காட்சிகளை
ஒரு போதும் 
தவிர்க்க முடிவதில்லை .

அது 
பெண்ணோ !
பிச்சைகாரனோ !
பேரறிவோ !
ஓர் பிழையோ !
நாய்க்குட்டியோ - இல்லை 
நகைக்கும் குட்டியோ !
பூக்காரியோ !
நாகரிகமோ !
அநாகரிகமோ!
cafe-day ஓ 
டீ கடை நாயரோ !
BMW ஓ 
AUDI ஓ 
பஞ்சர் கடையோ !
பால் பார்வையோ !
அரை நிர்வாண ஞானியோ !
முழு சட்டை முட்டாளோ !
கருப்பு சட்டை கூட்டமோ - இல்லை 
காவி சட்டையின் காமமோ !

இப்படி நீண்டு கொண்டே போகுது 
கனவுகளும் காட்சிகளும் ......

காட்சிகள் கண்ட களைப்பில் 
ஞானப் பெருமூச்சி விடுகிறேன்
 என் இருப்பை எண்ணி 
ஒரு கோப்பை தேநீருடன் !!!!