Wednesday, June 6, 2012

வினா வெளியில் ஓர் இரவு !


காதலோடும் காதலியோடும் 
வருகிறேன் கடலே !

நின் சப்த சிணுங்களில் 
சிணுங்கினாள் என் சிநேகிதி !

என் காதலி தீண்டலில் 
நீ சப்தமற்று போனாய் 
என் செவிகளில் !

புருவம் உயர்த்தி 
நிலவை காட்டினாள் !

அவள் கால்விரல் பிடித்து 
கூச்சம் கூட்டினேன் !

கன்னம் கிள்ளி 
காதல் பேசினாள் !

அவள் கன்னம் முழுதும்
காதல் பதித்தேன் !

நீண்ட இரவொன்று அவள் 
கண்களில் தெரிந்தது !

அவள் கண்கள் கொண்டே 
என் உடலும் விடிந்தது !

இப்படி நிகழ்ந்து கொண்டே இருக்குது 
மர்மமும் மாயையும் 
இடைவெளி இல்லா அலை போல !

ஒரு போதும் 
தீர்ந்து போவதில்லை 
கடலும் காதலும் ........

No comments:

Post a Comment