Wednesday, June 6, 2012

அடர்ந்த வனத்தில் ஓர் இலை ....


எதிர்ப்படும் காட்சிகளை
ஒரு போதும் 
தவிர்க்க முடிவதில்லை .

அது 
பெண்ணோ !
பிச்சைகாரனோ !
பேரறிவோ !
ஓர் பிழையோ !
நாய்க்குட்டியோ - இல்லை 
நகைக்கும் குட்டியோ !
பூக்காரியோ !
நாகரிகமோ !
அநாகரிகமோ!
cafe-day ஓ 
டீ கடை நாயரோ !
BMW ஓ 
AUDI ஓ 
பஞ்சர் கடையோ !
பால் பார்வையோ !
அரை நிர்வாண ஞானியோ !
முழு சட்டை முட்டாளோ !
கருப்பு சட்டை கூட்டமோ - இல்லை 
காவி சட்டையின் காமமோ !

இப்படி நீண்டு கொண்டே போகுது 
கனவுகளும் காட்சிகளும் ......

காட்சிகள் கண்ட களைப்பில் 
ஞானப் பெருமூச்சி விடுகிறேன்
 என் இருப்பை எண்ணி 
ஒரு கோப்பை தேநீருடன் !!!!

No comments:

Post a Comment