Monday, February 13, 2012

யாதும் காதலே !!!!

முட்டாள்தனத்தின்
ரகசிய பெட்டகமே!

அவிழ்க்க இயலாத
பாலினத்தின் முடிச்சுகளே!

தனிமை துயரின்
தாழ் நீக்கிய மாயையே!

சௌகர்யத்தின்
சகலமே!

ஆதாம் முதல்
அம்மாவாசை வரை
கடித்த ஆப்பிளே!

மீண்டுமொருமுறை
கிடைத்தால் கொடுத்துவிடு
ஏவாளிடம்..

பாவம் !

எத்தனை முறை
ஆதாம் மட்டுமே
கவிதை எழுதுவது.

யாதும் காதலே !!!!

No comments:

Post a Comment