Friday, May 27, 2011

காதலி பெண்ணே ...

உன் முத்தம் தந்த ஈரம் .
நீ அழுத போது நான் சிரித்தது .
நான் அழ நீயும் அழுதது.
அன்றிரவு நடந்த யாகம்.
உனை கண்டு காகமும் கலவி கொண்டது .
பேய் பிசாசு எல்லாம் திருமணம் முடித்துவிட்டது.
அப்பனும் அம்மையும் மறந்து போனார்கள்.
தம்பி தந்த 5 ருபாய் மட்டும் உன் கையில்.
நண்பர்கள் தந்த 1000 ருபாய் மட்டும் என் இருப்பில்.
கசங்கிய ஆடைகள் திருமண உடையான அந்த நாள்.
ஆசை  மடிப்புகள் முழுதும் தேய்ந்து போன நம் இரவுகள்
வறுமை காதலும் வயதாகாமல் நிலைத்துவிட்டது.
இப்படி அத்தனை நேரமும் - நம் 
காலமும் கடந்துவிட்டது .
இன்று நீ இறந்து விட்டாய் ..
எங்கேயோ  போய் விட்டாய் ..
நமக்கு மகன் பிறந்து விட்டான்..
அவன் உனை கண்டு சிரிக்கின்றான் ..
நான் பரிதாபப்படுகின்றேன் .
நான் இன்று அழுகின்றேன்  - நம் மகனும் 
அழுகின்றான்.
அலைய தொடங்கிவிட்டேன் மீண்டும் ஒரு
இழப்பை தவிர்க்க ...
பழகிவிட்டேன் வெறும் பனியாய் மறைய ..
இப்படி பல பழகிவிட்டது.
தேடிக்கொண்டே இருக்கின்றேன் ..
 நம் வாசத்தை...
வர்ணகளற்ற அந்த வானவில்லினை..
கடந்து கொண்டே இருகின்றது எனதான உன் காலம்.
அது முடியும் பொழுதும் மீதமிருக்கும்
நீ தந்த ஈரமும்...
நமக்கான நம் நினைவுகளும்...

Tuesday, May 24, 2011

மரண வேதம் ...

எனது மூளை அழுகிவிட்டது.
அது  பிணவாடையென - என்
சுவாசத்தில்  நுழைகிறது.
என் சுவாசத்தை  கரையான்கள்
கடந்து செல்கின்றன.
அதன் நேர்கோட்டில்
அத்தனையும் அரிக்கப்படுகின்றன.
என்றோ நிகழ்ந்த தப்பிற்கு - இன்று
அனைவரும்  பழிதீர்கின்றனர்.
நான் சற்று மனநிறைவோடு
மரித்துப்போகின்றேன்.
உண்மையில் எனக்கான
தருணம் வந்துவிட்டது .
இன்று அனைவரிடத்திலும்
மண்டியிடுகின்றேன் .
ஒரே  ஒரு முறை
எனக்காக  யாரேனும்
அழமுடியுமா ..?
எனது கல்லறையில்
உங்கள் பெயர்கள்  இடம்பெறாது ....
யாரேனும் ஒரே ஒரு முறை
எனக்காக அழமுடியுமா ..??
நிச்சயம் அடுத்த நொடியில்
மனநோயாளியாக பிறப்பேன்.
பேதங்களற்று போகும் - எனது
ஞானம் ..
மலமும் மூத்திரமும் ஒருசேர
என்னுடன் தூங்கும் ..
எனது வார்த்தைகள் பொருளற்று போகும் ..
எனது  ஆண்மை நிறமின்றி வெளியேறும்..
இப்படி எதுவுமின்றி போவேன் நான்.
தயவு செய்து  யாரும் இப்பொழுது
அழவேண்டாம்...
இனி அழவேண்டியது
நான் மட்டுமே..