Tuesday, May 24, 2011

மரண வேதம் ...

எனது மூளை அழுகிவிட்டது.
அது  பிணவாடையென - என்
சுவாசத்தில்  நுழைகிறது.
என் சுவாசத்தை  கரையான்கள்
கடந்து செல்கின்றன.
அதன் நேர்கோட்டில்
அத்தனையும் அரிக்கப்படுகின்றன.
என்றோ நிகழ்ந்த தப்பிற்கு - இன்று
அனைவரும்  பழிதீர்கின்றனர்.
நான் சற்று மனநிறைவோடு
மரித்துப்போகின்றேன்.
உண்மையில் எனக்கான
தருணம் வந்துவிட்டது .
இன்று அனைவரிடத்திலும்
மண்டியிடுகின்றேன் .
ஒரே  ஒரு முறை
எனக்காக  யாரேனும்
அழமுடியுமா ..?
எனது கல்லறையில்
உங்கள் பெயர்கள்  இடம்பெறாது ....
யாரேனும் ஒரே ஒரு முறை
எனக்காக அழமுடியுமா ..??
நிச்சயம் அடுத்த நொடியில்
மனநோயாளியாக பிறப்பேன்.
பேதங்களற்று போகும் - எனது
ஞானம் ..
மலமும் மூத்திரமும் ஒருசேர
என்னுடன் தூங்கும் ..
எனது வார்த்தைகள் பொருளற்று போகும் ..
எனது  ஆண்மை நிறமின்றி வெளியேறும்..
இப்படி எதுவுமின்றி போவேன் நான்.
தயவு செய்து  யாரும் இப்பொழுது
அழவேண்டாம்...
இனி அழவேண்டியது
நான் மட்டுமே..

No comments:

Post a Comment