Wednesday, July 20, 2011

பெண் எனும் பேரண்டம்.


நீண்ட நெடு பயணத்தில்
வீழ்ந்து போகுது பெண்மையின் தனிமை.
அது அவளுக்கானதாய் ஒரு போதும் இல்லை.
பிறப்பில் தொடங்கிய பெண்மையை
பிணம் வரை பிறரே சுமக்கின்றனர்.
சதை கொண்ட பூவினை
நகம் கொண்டே கிழிகின்றோம்.
அவள் அவளாகவே இல்லை.
குழந்தை
குமரி
காதலி
மனைவி
யாவரும் நலமா இங்கு...?
உறவினை அறுத்து எறிய..
கொச்சையாய் பேச
அவளுக்கும் உண்டு
ஆயிரம் ஆயிரம்..
நீண்ட நெடு பயணத்தில்
அழிந்து  போகுது பெண்மையின்  உலகம்.
வர்ணித்த வார்த்தைகளுக்கெல்லாம்
வயதாகி அழிந்து விட்டது - இனி
அவள் அவளாக மட்டுமே இருப்பாள்.
இனி தன்  கற்பதினில் - தனது
கனவினை மட்டுமே சுமப்பாள்.

Tuesday, July 19, 2011

கூட வா நிழலே ..

கூட வந்த நிழலே ..
கூட வந்த நிழலே ..
கூடலையே நாம இன்னும் ..
வெளிச்சம் வர   கூட வந்து   வெக்கையில நடக்க விட்ட ...
காட்டிருட்டு கண்டதும் எங்க போய் நீ ஒளிஞ்ச..
கண்மூடி நான் கிடக்க கனவுலையும் நீ இல்ல ..
பாரமுன்னு நீ  நெனைச்சா ராத்திரியில பதுங்கிகிட்ட ...
கலரு சட்ட போட்ட நானும் கறுப்பாத்தான் இருக்கேன் ..
உடம்பே    மீசையாகி நீண்டுகிட்டே போறேன் ...
களவாணி பயபுள்ள கண்மூடி கெடக்குற..
காதலி இல்லைன்னா  நிலத்துல விழுகுற ..
என் உசுரே கறுப்பாகி ஜோடி போட்டு வருது..
12   மணி ஆனதும் பாதத்த நக்குது..
கூட வா நிழலே ..
கூட வா ...
கூத்தடிக்க கூட வா.

Wednesday, July 13, 2011

நிர்வாண சட்டை …


ஆடையணிந்தும் நிர்வாணமாய்
என்
  வீட்டுப்பனித்துளி.
வசிக்க இடம் தேடிய

நாளிலெல்லாம் மறந்தே போனேன் - நான்

எப்போதோ வசித்த இவ்வீட்டினை.

ஒரு முறை கூட - இப்படி

வாழ இயலவில்லை என்னால்.

சுவர்கள் இல்லை
,
உணவு இல்லை
,
கழிவறை இல்லை
.
சிறிது நேரம் வசித்த பின்

நானும் நிறைந்து நிர்வாணமானேன்.

உட்சென்று உயிர் தீண்டி

நனைந்து விட்டது - என்
 
நாணமும்  ஞானமும்.
பிஞ்சுக்குழந்தையின்

கருப்பை போன்று அத்தனை

தூய்மை அப்பனித்துளி.

சாயம் போகாத சலவை செய்யாத

சரும பயிர் வெளி.

நாம் முகம் பார்க்கலாம்.

சிரிக்கலாம்
,
ஒரு முறை வசித்துவிட்டு திரும்பலாம்.

உட்சென்றபடி சூரியனை முத்தமிடலாம்.

இனி -

ஆடையணிந்தும் நிர்வாணமாய் - நானும்

என்
  வீட்டுப்பனித்துளியும்

Friday, July 8, 2011

ஞானக்கூத்து

அழிந்து கொண்டிருக்குது  வார்த்தை
ஒவ்வொரு எழுத்தின் அழிவிலும்
மீதுமுள்ளது  வாசிக்க இயலாத பொருள்.
யாவும் அழிந்த பின்னும்
நிறைந்து கிடக்குது  ஞானத்தாள்.