Wednesday, July 20, 2011

பெண் எனும் பேரண்டம்.


நீண்ட நெடு பயணத்தில்
வீழ்ந்து போகுது பெண்மையின் தனிமை.
அது அவளுக்கானதாய் ஒரு போதும் இல்லை.
பிறப்பில் தொடங்கிய பெண்மையை
பிணம் வரை பிறரே சுமக்கின்றனர்.
சதை கொண்ட பூவினை
நகம் கொண்டே கிழிகின்றோம்.
அவள் அவளாகவே இல்லை.
குழந்தை
குமரி
காதலி
மனைவி
யாவரும் நலமா இங்கு...?
உறவினை அறுத்து எறிய..
கொச்சையாய் பேச
அவளுக்கும் உண்டு
ஆயிரம் ஆயிரம்..
நீண்ட நெடு பயணத்தில்
அழிந்து  போகுது பெண்மையின்  உலகம்.
வர்ணித்த வார்த்தைகளுக்கெல்லாம்
வயதாகி அழிந்து விட்டது - இனி
அவள் அவளாக மட்டுமே இருப்பாள்.
இனி தன்  கற்பதினில் - தனது
கனவினை மட்டுமே சுமப்பாள்.

No comments:

Post a Comment