Sunday, August 7, 2011

முன்பொருகாலத்தில் ஒற்று(ப்)பிழை .......

முன்பொருகாலத்தில் தான் பார்த்த கனவு காட்சியினை
விவரிக்க தொடங்கினான் அந்த மனிதன்.
அது முற்றிலும் சிதைந்த ஒன்றாக இருந்ததென  அவன் கூறினான்.
மூச்சி முட்ட கவிதைகளை முன்பிரவு படித்ததாக சொன்னான்.
 எந்தவொரு விருப்பமும் இல்லாமல் அவன் சொல்வதை கேட்கலானேன்.
ஒரு பெண்ணை பற்றியும் விவரித்தான் .
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நண்பா  நேற்று
நீ சரியா தூங்கலையா..?
இப்படி அவனும் நானும் புரிந்தும் புரியாமலும் காலம் கடத்தினோம்.
சிறிது நேரத்திற்கு பின் காற்றினை உணவாக தந்தார்கள்  தேவதைகள்.
பட்ட மர நிழலாய் பரவி கிடந்தது அந்த வெறுமை.
நீண்ட வரிசைக்கு பிறகு உறங்குவதற்கான இடமும் அனுமதியும் கிடைத்தது.
சற்றே மௌனமாகி அந்த உருவத்தை பார்த்தேன்...
நான் என்றோ இழந்த அன்பினை என்னுடைய  இளம்வயதில் தந்த அதே"ரயில்வே கேட் ஆயா"..தான் அது .
திரும்பி பார்கையில் பிரம்போடு  மோகன் வாத்தியார்.
சற்று பயம் கலந்த மரியாதையுடன்
ஐயா நீங்க இங்க எப்படி ..?
இம்முறை அடிக்காமல் சிரித்துவிட்டு தன் இருக்கை நோக்கி நடந்தார்.
ஆயிரமாயிரம் முகங்கள் இதுபோல
பார்த்த பார்க்க நினைத்த எத்தனையோ முகங்கள்.
இன்னும் வரிசைகள் குறைந்தபாடில்லை.
எங்கள் படுக்கை நோக்கி நடந்தோம் ..
அதற்குள் நிரம்பிவிட்டதாக சொல்லி ..
மீண்டும் காத்திருக்க சொன்னார்கள்.
நீண்ட பயணத்திற்கு பிறகு - இன்றுதான்
நிம்மதியாக  உறங்கவிருக்கின்றோம்.

No comments:

Post a Comment