Tuesday, February 15, 2011

உயிர் மழை ..

விரட்டியடிக்கப்பட்ட  நாயென - என்
வீடு தேடி வந்தது நன்றியுள்ள மழை...

எரியும் பிணமென 
விறைத்து விழுந்தது என் மனதில் ..

எத்தனை முறை வீழ்ந்த  பின்னும் - இன்னும்
அரசனாகவே  என் மழை ..

உனை முழுதாய் முத்தமிட
எண்ணிய நாளில் நான் சிறுவனாக இருந்தேன் ..

இன்றும் நீ அதே மழையாக இருகின்றாய் - நான்
அதே சிறுவனாக  இல்லை ..

ஆடை களைந்து உனை சூடிக்கொள்ளவே விருப்பம் - ஆனால்
சட்டையனியவே சாபம் பெற்றேன்...

என்றேனும் ஒரு நாள் என்னுள்  உயிரென
உயிரணுவாவாய் -அன்று
யாரோடு புணர்ந்து உனை மீண்டும்
புனிதமென  ஜனிக்கச்செய்வேன்..

நிச்சயம் மனிதரோடு அல்ல .
கடவுளோடும் அல்ல .
வழியேதும் இல்லையெனில்
நானே  உனதாவேன் .
அன்று நான் மனிதனாக இருக்கமாட்டேன் .

பிறக்காத உயிரணு நாம் ..
இறந்தபின்  அமைதியும் நாம் ..
இப்படி யாதுமாகி நாம் ..

ஒரேயொரு  அச்சம்  மட்டுமே எனக்கு ....?

மானிடரே  மழையோடு நான்  கொண்ட
உறவை கள்ளத்தொடர்பென பேசாதீர் ...

No comments:

Post a Comment