Wednesday, February 9, 2011

ஏதேனும் நிகழ்ந்தால் நன்று

ஆழ்ந்த உறக்கத்தில் நிர்வாண ஞானத்தை
உணரும்   பொழுது அடி வயிற்றை கடித்திடும்
கொசுவினை வன்கொலை செய்திட -

சாராய நெடியும் காமமும் கொண்ட
கவிதைகளை இடைகால தடை செய்திட -

சிறுகதை வாசிக்கும் வேளையில் சிறுநீர்
வருவதை தடுத்திட -

மலம் கழிக்கும் முன் - தேநீர்
பருகுவதை  நிறுத்திட -

அப்பாவின் சிகரெட்டை  தினமும்
திருடுவதை  மாற்றிட -

அம்மாவின் அழுகைக்காக ஏதேனும்
 ஒரு வேலைக்கு செல்வதை  மறந்திட -

தங்கை என்று  அறிமுகம் செய்யும் நண்பனிடம்
ஏதேனும் உளறாமல் இருந்திட -

நான் காற்று வெளி  அற்பம்  நிலையானவன்
தீபம் இருள் என்று பிதற்றுவதை  சகித்திட -

ஒருமுறையேனும்  தவறுக்காக  அழுதிட -

வீழ்ந்த பின்னும் வாழ்வதற்கு - ஒரு
வழியேனும் தோன்றிட

இதை எழுத்தும் வேளையில் எவரேனும்
படிக்காமல் இருந்திட -

ஏதேனும் நிகழ்ந்தால்- நன்று
என்  ஆவியே !
என் அண்டமே !

No comments:

Post a Comment