Tuesday, February 22, 2011

மரணவீதி !!!


ஒரு குழந்தையை  முத்தமிடுவதன் மூலம்
எனது மனச்சுமை சிறிது குறையலாம்..
?

அதற்க்கான தருணம் இன்றுவரை

வாய்க்கவில்லை..


அது நிகழும் என்றும்

நம்பிக்கை
  இல்லை..

நான் வளர்ந்துவிட்டதாகவே -
இந்த
சமூகம் சொல்கிறது ..


உனக்கு அறிவில்லையா - என்று

எவரேனும் கேட்டு விட்டால் ..
?

முத்தமிடுவதற்கு
  அறிவு
தேவையில்லை
  என்பதை
எப்படி நான்
உணர்த்துவேன்..?..

ஏதோ ஒரு உதடோ ..? - இல்லை
ஆண்மையோ ..? பெண்மையோ ..?
எது தேவை ..?
எனக்கு இவையெல்லாம் இல்லை .
முத்தமிட ஏதோ ஒரு காரணம் போதும்.
அது  மரண வீதியின் கடைசி
விருப்பமாகவும்  இருக்கலாம்.
இன்று தொடங்கும்  வாழ்கைக்காக..!
அன்றே முடிந்துவிட்ட
  அமைதிக்காக..!
மீண்டும் குழந்தையென
  அம்மாவிடம்  அடம்பிடிக்க ..!
இப்படி அவரவர் விருப்பம்

எதுவாகவும் இருக்கலாம் ..

நீங்கள் மரண வீதியில்
  பயணிக்க உள்ளீர்கள் ..
அது நீங்கள் விரும்பும்
  முத்தத்தை - உங்களுக்கு
கொடுக்காமலும்
  உங்களிடம் பெறாமலும் போகலாம்..!
இன்று முடிவதற்குள் ஒரே ஒரு

காரணத்தை
  தேடிச்செல்லுங்கள் ..
அது மரணவீதியில் உங்களின்
  கடைசி
முத்தமாகவும் இருக்கலாம்.

இல்லை -
உங்கள் மரணத்தை
எவரேனும் முத்தமிடலாம் .

எது நிகழ்ந்தாலும் - அது

பிறவிப்பயனே ..!!!

 


No comments:

Post a Comment