Monday, February 7, 2011

என் செய்தால் தீரும் ?

என்ன செய்ய இயலும் -சாலையோர
சக நண்பனை பார்க்கையில்,
உலகமயமாக்கலை  எண்ணி -ஒரு கவிதை
எழுத இயலும் -வேறென்ன
புடிங்கிவிட முடியும் என்னால் ?
அவனருகே அமர யோசிக்கும்
அற்ப மானிடர் தானே நாம் .
எவனோ விதைக்கின்றான் விதையை
எவனோ அமர்கின்றான் நிழலில்..
தனியொரு மனிதனுக்கு உணவில்லை ..
இன்றுவரை இந்த ஜகத்தை அழிக்க முடியவில்லை
ஏன் பாரதி கவிதையோடு அன்றே மறைந்து போனாய்?
எதை சொல்லி இந்த வலிகளை முடிவு செய்வேன் ?
மனநோயாளியாக இருந்தால்
இவ்வலி குறையுமா ?
நிறைய உண்டு மீதம்  -எதை சொல்லி
இங்கு முடிப்பேன் ?
மண்டியிட்டு  கேட்கின்றேன்
மரணமே !!
எனை தழுவிச்செல்..

No comments:

Post a Comment