Friday, February 11, 2011

காதல் எனும் உரையாடல்


ப்ரியமே ..?
ம்ம்ம்ம்ம்ம்ம்..?
இந்த உலகத்திலேயே நீதான் பேரழகின்னு
நான் எப்பயாவது சொல்லி இருக்கேனா ?
ம்ம்ம்ம் நிறைய தடவ .
அப்படியா ?
ஆமா .ஏன் இப்ப இந்த சந்தேகம்?
ஒன்னும் இல்ல .
சொல்லு ?
ம்ம்ம்ம் நான் அப்பா குடிச்சி இருந்தனா ?
எனக்கு நினைவில்ல ?
நினைவு இல்லாம போகும் ?ஆனா
வாடை அடிசுருக்குமே ?
ம்ம்ம்ம்ம்ம் எனக்கு வியர்வை நாற்றம் தான்
அடிச்சது ?
அப்டீனா அப்போ நாம செக்ஸ் வட்சிகிட்டமா ?
செக்ஸ் இருந்தாதான் வேர்வ வரும்னு எந்த
பெரும் ஞானி சொன்னது உனக்கு ?
இல்ல ...ஒரு சந்தேகம் ?
எனக்கு சந்தேகம் தீர்ந்து போச்சி ?
என்ன ?
சத்தியமா அப்போ நீ குடிச்சி தான் இருந்த .
கல்யாணத்துக்கு முன்னாடி தப்பில்லையா?
எது ?
வட்சிகிட்டா ?
கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வே தப்புதான் .
அப்போ நான் யாரு?
நீ ஒரு கோடி ஹார்மோன் , நான் பலகோடி சங்க இலக்கியம் ?
எனக்கு புரியல ?
லைப்ரரில புக் எடுத்து தர  உன்ன லவ் பண்ணா
உனக்கு எப்படி புரியும் ?
என்ன அசிங்கபடுதிரியா ?
நான் முட்டாளா?
காதல்ல  முட்டாள் தனம் தான் நல்லா  இருக்கும் .
அப்போ எனக்கு எதுக்கு சங்க இலக்கியம் தேவ ?
நான்  அப்படி சொல்லல ?
அப்போ ஏன்  ஏன் கூட பழகுற ?
ஏன்னா .....?
என்ன  பேரழகின்னு நீ மட்டும் தான்
கூப்பிட முடியும் .அதுக்காகதான் ..
போதுமா என் செல்லமே ?
cut cut cut...
madam இந்த இடத்துல ரென்னு dialogue விட்டுடீங்க ?
அவன் ஏன்னு கேட்ட பிறகு
நீங்க எனக்கு பசலை நோய்னா ?என்னனு
தெரியனும் அதுக்காகதான்  love னு நீங்க
சொல்லனும் மேடம் ?
ok ok ok sir
FIRST டைம் பெர்பெக்ட் தமிழு பேசுது  இல்லையா
அதான் கொஞ்சும்  பயந்துட்டேன்
டபிங்க்லே  சரியாய் பேசுற பொண்ணா ?
போடுங்கோ சார் ?
இந்த DIALOGUE MEANING மட்டும் கரெக்டா
சொல்லிடீன்கன  நான்  MISTAKE பண்ணது?சார்
ஓகே ஓகே ஓகே
One More ...
Camera : Rolling
Action.....
ப்ரியமே ?
ம்ம்ம்ம் ?







 


No comments:

Post a Comment