Saturday, February 12, 2011

எதற்காக அவள் ?

அவளைச்சுற்றி எப்பொழுதும் மீசைகளின் ஆரவாரம்
கறைபடிந்த பற்களுடன்  சாராய நெடியுடன்
அர்த்தம்கொண்ட சிரிப்புடன் வீரியம் கொண்ட பார்வையுடன்
என்றேனும் நிகழ்ந்து விடும் என்ற ஆசையில்
ஏதேனும் நிகழாதா என்ற தவிப்பில் ...
இப்படி அவளைச்சுற்றி எப்பொழுதும் ஆரவாரம் -
அவள் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை
தன்னருகே வீழ்ந்திருக்கும் வயோதிகனுக்கு
தேநீர் தராமல் அவள் இருந்ததே  இல்லை -
அவன் உணர்சிகள் இல்லாதவன் என்றே தோன்றியது .
ஒரு வேளை அவளின் உணர்ச்சிகள் மடிந்திருக்கலாம் .
கர்பப்பை  இல்லாமல் இருக்கலாம் ;
இல்லை பிறப்புறுப்பில்  எந்த தேவ...  மகனோ வெடி வைத்திருக்கலாம் .
கம்பி வேலியில் தனது அண்டம் அடைபட்டிருக்கலாம்,
எதுவேண்டுமானாலும் இங்கு நிகழும் ...
எத்தனை முறை அவர்களால் பிணத்துடன்  புணர முடியும் ..
அவள் அப்படித்தான் தன்னை உணர்ந்தாள் .
இருபினும் எதற்காக அவள் காத்திருக்கிறாள் ?
நமக்கு செய்திகள் மூலமாகவே அவை வந்து சேரும் .....
வேறென்ன செய்துவிட முடியும் அவளால் ?
நிச்சயம் என்றாவது ஒரு  நாள் நமக்கு சேதி வரும்...
அன்று தயவு செய்து எந்த ஆண்மகனும்
அவளது  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதீர் ....






No comments:

Post a Comment