அவளைச்சுற்றி எப்பொழுதும் மீசைகளின் ஆரவாரம்
கறைபடிந்த பற்களுடன் சாராய நெடியுடன்
அர்த்தம்கொண்ட சிரிப்புடன் வீரியம் கொண்ட பார்வையுடன்
என்றேனும் நிகழ்ந்து விடும் என்ற ஆசையில்
ஏதேனும் நிகழாதா என்ற தவிப்பில் ...
இப்படி அவளைச்சுற்றி எப்பொழுதும் ஆரவாரம் -
அவள் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை
தன்னருகே வீழ்ந்திருக்கும் வயோதிகனுக்கு
தேநீர் தராமல் அவள் இருந்ததே இல்லை -
அவன் உணர்சிகள் இல்லாதவன் என்றே தோன்றியது .
ஒரு வேளை அவளின் உணர்ச்சிகள் மடிந்திருக்கலாம் .
கர்பப்பை இல்லாமல் இருக்கலாம் ;
இல்லை பிறப்புறுப்பில் எந்த தேவ... மகனோ வெடி வைத்திருக்கலாம் .
கம்பி வேலியில் தனது அண்டம் அடைபட்டிருக்கலாம்,
எதுவேண்டுமானாலும் இங்கு நிகழும் ...
எத்தனை முறை அவர்களால் பிணத்துடன் புணர முடியும் ..
அவள் அப்படித்தான் தன்னை உணர்ந்தாள் .
இருபினும் எதற்காக அவள் காத்திருக்கிறாள் ?
நமக்கு செய்திகள் மூலமாகவே அவை வந்து சேரும் .....
வேறென்ன செய்துவிட முடியும் அவளால் ?
நிச்சயம் என்றாவது ஒரு நாள் நமக்கு சேதி வரும்...
அன்று தயவு செய்து எந்த ஆண்மகனும்
அவளது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதீர் ....
கறைபடிந்த பற்களுடன் சாராய நெடியுடன்
அர்த்தம்கொண்ட சிரிப்புடன் வீரியம் கொண்ட பார்வையுடன்
என்றேனும் நிகழ்ந்து விடும் என்ற ஆசையில்
ஏதேனும் நிகழாதா என்ற தவிப்பில் ...
இப்படி அவளைச்சுற்றி எப்பொழுதும் ஆரவாரம் -
அவள் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை
தன்னருகே வீழ்ந்திருக்கும் வயோதிகனுக்கு
தேநீர் தராமல் அவள் இருந்ததே இல்லை -
அவன் உணர்சிகள் இல்லாதவன் என்றே தோன்றியது .
ஒரு வேளை அவளின் உணர்ச்சிகள் மடிந்திருக்கலாம் .
கர்பப்பை இல்லாமல் இருக்கலாம் ;
இல்லை பிறப்புறுப்பில் எந்த தேவ... மகனோ வெடி வைத்திருக்கலாம் .
கம்பி வேலியில் தனது அண்டம் அடைபட்டிருக்கலாம்,
எதுவேண்டுமானாலும் இங்கு நிகழும் ...
எத்தனை முறை அவர்களால் பிணத்துடன் புணர முடியும் ..
அவள் அப்படித்தான் தன்னை உணர்ந்தாள் .
இருபினும் எதற்காக அவள் காத்திருக்கிறாள் ?
நமக்கு செய்திகள் மூலமாகவே அவை வந்து சேரும் .....
வேறென்ன செய்துவிட முடியும் அவளால் ?
நிச்சயம் என்றாவது ஒரு நாள் நமக்கு சேதி வரும்...
அன்று தயவு செய்து எந்த ஆண்மகனும்
அவளது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதீர் ....
No comments:
Post a Comment