இவள் ராகம் கலந்த
பூவின் இதழ்..!!
ஸ்வரங்கள் சேர்ந்த
மழையின் துளி..!!
இவள் மூங்கில்மேல்
அமரும் பனித்துளி..!!
தாகம் தீர்க்கும்
இசையின் மழை..!!
இவள் குருவிகள் குளிக்கும்
வானவில் அருவி..!!
பூக்கள் சூடிய
கூந்தல் அருவி..!!
இவள் வங்காள மண்ணின்
கீதம்..!!
இவள் தேன்குரல்
கூறும் மீதம்..!!
சுடிதார் அணிந்த
குயில் இவள்..!!
தென்றல் சுமக்கும்
குழந்தை இவள்..!!
தேநீர் அருந்தும்
தேவதை இவள்..!!
காற்றை இசைக்கும்
சிறகு இவள்..!!
அடர்ந்த வனத்தில் – ஓர்
இலை இவள்..!!
ஆளில்லா சாலையின்
அமைதி இவள்..!!
மழைக்கால மயிலின்
தோகை இவள்..!!
இவள் பாட
பனித்துளி சிலிர்க்கும்..!!
பூ பேசும்
வார்த்தையெல்லாம்
ஸ்ரேயா பேச கண்டேன்..!!
ஸ்ரேயா பாடிய பாட்டிலெல்லாம்
தேகம் சிலிர்க்க நின்றேன்..!!
உனக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்குமடி
ஒரு முறை கேட்ட நொடி உன்னையும் பிடித்ததடி..!!
பூவை ரசிப்பது ஓர் இன்பம்
பூ பாட ரசிப்பது பேரின்பம்..!!
ஒரு முறை உனை கண்டு
என் பெயர் சொல்லச் சொல்வேன்..!!
பிறவிப் பயன் போதுமென்றே
கல்லறை நோக்கி நான் செல்வேன்..!!
ஸ்ரேயா ஓ ஸ்ரேயா.....
No comments:
Post a Comment