நீ தீண்டாத என் உடல் – இன்னும்
பிறக்கவில்லை..!!
நீயில்லா இரவு – இன்னும்
விடியவில்லை..!!
காற்றின் கருவறையில் தங்கிக்கொண்டது
நீ பேசிய மௌனங்கள்..!!
கனத்த மனதின் காற்று
கர்ப்பிணி போல நடக்கிறது..!!
வானின் பிம்பம் விழுந்து
கடல் வானமானது..!!
நிலா ஒருபோதும்
நீரில் நனைவதில்லை..!!
நனையாத நிலவை
படகும் சுமப்பதில்லை..!!
நேற்றிரவின் மழை ஏதோ ஒன்றை
தூவியது..!!
மழை நின்றபின்
வானமே விழுந்தது..!!
காரணமின்றி அழுகிறது
பேசப்படாத வார்த்தைகள்..!!
காரணத்தோடே அழுகிறது
உனக்கான முத்தங்கள்..!!
ஞாபகச் சேற்றில்
விதைந்துக் கிடக்கிறோம்..!!
நாளையின் மீதொரு நம்பிக்கை வைக்க
நாளையின் முடிவில் வருவாயா !?
No comments:
Post a Comment