Wednesday, September 5, 2012

நீயின்றி அமையாது என் இரவு !!!


வெளிச்சமற்ற இரவில்
விடிந்துகொண்டிருந்தது நம் உடல்கள் 

ஒருபோதும் உதிராத உன் விழிப்பூவை
சூடிக்கொண்டது என் உடல் !

உதிர்ந்த உன் கூந்தலை
சூடிக்கொண்டது நம் அறை !

வீடெங்கும் உன் வாசம் !
அறையெங்கும் உன் தாகம் !

ஒருபோதும் உறங்காத ஆந்தை
கண்மூடி காதை பொத்திக்கொண்டது !

பூபெய்திய உன் முத்தத்தால்
நீராடுது பருவம் !

மனதின் இடுக்கில் இசையாய்
நுழைகிறது உன் காற்று !

நாம் காதல் உமிழ்ந்த எச்சம் !
காதல் கூறும் மிச்சம் !

நீயில்லா இரவை
நிலவும் ரசிபதில்லை
நானும் அப்படிதான் !

தனிமை துயரின்
தாழ் நீக்கினாய் அன்று ,
இன்று  என்னையும் !

தனிமை தெருவில் தகர்ந்து நிற்கிறது
தாழிடப்பட்ட நம் மனதின் வீடு !

நீயில்லா என் இரவை
இனி யார் ஆள்வது !

நீரின்றி அமைய சாத்தியம்
நீயின்றி சாத்தியமோ என் உலகு.....!!!

No comments:

Post a Comment