வெளிச்சமற்ற இரவில்
விடிந்துகொண்டிருந்தது நம் உடல்கள்
ஒருபோதும் உதிராத உன் விழிப்பூவை
சூடிக்கொண்டது என் உடல் !
உதிர்ந்த உன் கூந்தலை
சூடிக்கொண்டது நம் அறை !
வீடெங்கும் உன் வாசம் !
அறையெங்கும் உன் தாகம் !
ஒருபோதும் உறங்காத ஆந்தை
கண்மூடி காதை பொத்திக்கொண்டது !
பூபெய்திய உன் முத்தத்தால்
நீராடுது பருவம் !
மனதின் இடுக்கில் இசையாய்
நுழைகிறது உன் காற்று !
நாம் காதல் உமிழ்ந்த எச்சம் !
காதல் கூறும் மிச்சம் !
நீயில்லா இரவை
நிலவும் ரசிபதில்லை
நானும் அப்படிதான் !
தனிமை துயரின்
தாழ் நீக்கினாய் அன்று ,
இன்று என்னையும் !
தனிமை தெருவில் தகர்ந்து நிற்கிறது
தாழிடப்பட்ட நம் மனதின் வீடு !
நீயில்லா என் இரவை
இனி யார் ஆள்வது !
நீரின்றி அமைய சாத்தியம்
நீயின்றி சாத்தியமோ என் உலகு.....!!!
No comments:
Post a Comment