நினைவு புறாக்கள் உள்வானில் பறந்தன !
யாருமில்லாத இரவை ஆள்கிறது நிலவு !
நேரம் தவறாமல் கடிகாரம் ஓடுகிறது !
கடிகாரம் நின்றாலும் நேரம் ஓடத்தான் செய்கிறது !
நேரம் பார்க்காமல் நாமும் ஓடுகிறோம் !
தூக்கம் இல்லாத கடலை பார்க்கிறது
யாரோ விட்டுச்சென்ற நாய்க்குட்டி !
தூக்கம் இல்லாமல் தவிக்கின்றான்
பெண்ணையும் பொன்னையும் பெற்றவன் !
மார்கழி சாலையை மூடிக்கொள்கிறது பேரமைதி !
டீ கடை சப்தத்தால் விழித்துக்கொண்டது சேவல் !
சேவல் கூவாமல் விழித்துக்கொண்டது அடிவானம் !
அடிவான சிவப்பில் சோம்பல் முறிக்கின்றது
நேற்றிரவை ரசிக்காத காகம் !
காகத்தின் சப்தத்தால் கோபம் கொள்கிறான் தேசாந்திரி !
தேசாந்திரி பார்வையில் உலகம் விடியவே இல்லை !
உலகை அதன் குறைகளோடே ஏற்றுக்கொள்கிறான் !
உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாமும் குறைகளே !!
No comments:
Post a Comment