Sunday, November 4, 2012

நெஞ்சுக்குள்ள


நேத்து வர அடிச்ச காத்து
வேற தெச வீசுதுங்க..!!

மொளைக்காத பூவ தேடி
மூனு நாளா அலையுதுங்க..!!

கருவாச்சி நீ இல்லாம
கறிச்சோறு கசுகுதடி..!!

கடிகார முள்ள போல
மனசு இப்ப சுத்துதடி..!!

பதிச்ச முத்தம் காயும் முன்னே
பாவி மவ போயிட்ட..!!

பழைய சோறு நெனபுலதான்
அரளி வெத கலந்துட்ட..!!

தேங்கி கடந்த நெனபுலதான்
தேகம் சுத்தி வந்துச்சி..!!

கருப்பு தங்கம் போன பின்னே
நோவுலதான் வெந்துச்சி..!!

அந்தி சாயும் வேளையில
ஆகயந்தான் செவக்குது..!!

அன்னக் கிளி நீ இல்லாம
அண்டம் இப்ப கசக்குது..!!

பாடை கட்டி போகும்போது
பாவி நீயும் பாத்துக்க..!!

பதிச்ச முத்தம் காயலடி
பதுங்கி நின்னு அழுதுக்க..!!









No comments:

Post a Comment