நடக்கப்பழகிய காலம் முதல் - இன்று
நடந்துகொண்டிருக்கும் காலம் வரை ..
அந்த மனிதனை கடக்காமல் - எந்த
சாலையும் முடிவுற்றதில்லை .
எந்த பேதமுமின்றி ஒரே சிரிப்பு
அனைவரிடத்திலும் ..
மயிர்களுக்கிடையே சுருங்கிப்போயிற்று
அவனது முகம் .
அது அவனது அடையாளம் .
வறுமை சிரிப்பும்
தூய்மையற்ற சுவாசமும்
அவனை இயக்குகிறது .
உலக பொருளாதாரமும் , தனி மனித சோறும்
அவனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அவன் ஒரு நெடுஞ்சாலை புத்தன்.
எந்த மரமும் அவனுக்கு தேவையில்லை.
பலரது ஞானம் அவனது மௌனத்தில் அடங்கிவிட்டது.
அவனது மரணம் பலரது பாவத்தால் முடிந்துவிட்டது.
நம்முடைய மரணம் அவனது சாலையை கடந்துபோகின்றது.
நடந்துகொண்டிருக்கும் காலம் வரை ..
அந்த மனிதனை கடக்காமல் - எந்த
சாலையும் முடிவுற்றதில்லை .
எந்த பேதமுமின்றி ஒரே சிரிப்பு
அனைவரிடத்திலும் ..
மயிர்களுக்கிடையே சுருங்கிப்போயிற்று
அவனது முகம் .
அது அவனது அடையாளம் .
வறுமை சிரிப்பும்
தூய்மையற்ற சுவாசமும்
அவனை இயக்குகிறது .
உலக பொருளாதாரமும் , தனி மனித சோறும்
அவனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அவன் ஒரு நெடுஞ்சாலை புத்தன்.
எந்த மரமும் அவனுக்கு தேவையில்லை.
பலரது ஞானம் அவனது மௌனத்தில் அடங்கிவிட்டது.
அவனது மரணம் பலரது பாவத்தால் முடிந்துவிட்டது.
நம்முடைய மரணம் அவனது சாலையை கடந்துபோகின்றது.
பலரது ஞானம் அவனது மௌனத்தில் அடங்கிவிட்டது.
ReplyDeleteஅவனது மரணம் பலரது பாவத்தால் முடிந்துவிட்டது.
like this words..