Tuesday, January 10, 2012

கனவுகளில் கடந்ததேசம்...

மறுமலர்ச்சி மின்மினியே..
பூப்பெய்திய பனித்துளியே..

உன்னில் விழுந்த பூவின் பிம்பம்
வானத்தை வரைந்து காட்டும்.

மிதந்து போகும் மேகமெல்லாம்
நின் தேகம் சிலிர்த்த மிச்சம்.

நீரில் விழுந்த நிலவின் படகில்
நீ என்றோ தந்த முத்தத்தின் மௌனம்.

உன் கண்கள் கொண்டே விடிந்தது
என் உடலும் உலகமும்.

உன் புருவம் அசைந்த கண்மேட்டில்
நின்றபடி நீந்திச்செல்லும்
மண்மீனின் மாயம்.

மீண்டும் மீண்டும் உயிர் தொட்டே
புலர்கிறது - என்
கனவுகளின் பொழுதுகள்.

No comments:

Post a Comment