Tuesday, October 29, 2013

Life has to go ....!!!

ஏன் இழப்புகளின் மீதான
நினைவுகள் - நம்
தனிமையில் தீவிரமடைகிறது..?

யார் அவ(ர்க)ள் ..?
என்னுடனான உறவை
எளிதில் துண்டித்த(வர்க)ள்.

ஆசுவாசமான அலைகளில்
அடித்து வரப்படும்
கிளிஞ்சல்களை போல்
என் வாழ்வில் நுழைந்த(வர்க)ள்..!!

சரியான காரணங்களற்ற பிரிவில்
மனம், ஒரு போதும்
சாந்தமடைவதில்லை.

அவ(ர்க)ளுக்கும் அப்படித்தான்
இருக்க வேண்டும், என்றெண்ணுவது
முரண் கொண்ட வாழ்வின் யதார்த்தம்.

No comments:

Post a Comment