வாகனத்தை விரட்டிச் சென்று,
நின்று விட்ட நாயென,
பரிதாபமாய் தவிக்கிறது
மனம்.
எதிர்ப்படும் நிஜங்களின்
உருவம் வர்ணங்களற்று
தெரிகிறது.
யாரும் தேவையில்லை
என்றான பின்னும்,
தேவையில்லாமல்
குழம்பிக் கொள்கிறது வாழ்க்கை.
நம்பிக்கை மீதான
சந்தேகம்,
சந்தேகமில்லாமல் விளங்குகிறது.
விலகிச் சென்றோரின்
நிஜத் தன்மை,
நீண்ட இடைவெளிக்குப் பின்
தெளிவாகிறது.
யாதும் கடந்து செல்வதே,
இதுவும் கடந்து போகும்..!!
அழகு.....
ReplyDelete