எங்கே போனாய் நீ..., .?
நீண்ட பயணத்தில்
நிறுத்துமிடம் இல்லாத சாலை தோறும்
பயணித்துக் கொண்டே இருக்கிறது என் மனம்.
ஆசுவாசமாய் உடல் சாய்ந்து,
ஓரிரு வார்த்தைகள் பேசி
நீண்ட நாட்களாகி விட்டது .
எவரிடத்திலும் பகிர்ந்து கொள்ள
இயலவில்லை என்னால் - என்
தனிமையின் சலனத்தை.
நீயாக வீசிவிட்டுப் போன சிறகொன்று
எதனை பின்தொடர இயலும்
காற்றில்லா இவ்வெளியில்..!!
இருளில் ஒளிந்துகொண்ட
நிழலானப் பின்
உன்னை எங்கே தேடுவேன்..?
உனக்குள் இருக்கும் என்னை வழியெங்கும் தேடினால் எப்படி கிடைப்பேன்....????
ReplyDelete