Monday, November 22, 2010

யாதுமாகி........

அந்த இரவு  நிசப்தமாக இருந்தது ..... 
மழைத்துளியினுள்  மின்மினி போல .. 
நகர்ந்து கொண்டிருக்கும்  நிலவின் நிழல்  போல .. 
இறந்துகொண்டிருக்கும்  மூதாட்டியின் கனவு போல .. 
உறங்கிகொண்டிருக்கும்  பிட்சைகாரியின் மௌனம்  போல.. விழித்துக்கொண்டிருக்கும்  பூனையின் சிந்தனை போல ..
பாமரனின் வியர்வை போல .. 
காதலை சொல்லிய இளைஞனின்  கூச்சம் போல.. 
காதலை மறுத்த  பெண்மையின்  பொய்யை போல..  
வாடகை தாயின் கருவை போல..
 குழந்தையின்  கண்கள் போல.. 
டீ கடை நாயரின்  சந்தனப்பொட்டு  போல ..

இப்படி யாதுமாகிய  இரவை நான் ரசித்ததே இல்லை. நாளைக்கு பையனுக்கு பொறந்த நாள்
dress எடுக்க காசு இல்ல ... ஹையோஒ...  ஹையோஒ ...


இந்த இரவு எப்பொழுதும் நிசப்தமாகவே  இருகின்றது.....
 

No comments:

Post a Comment