Saturday, December 4, 2010

இருள்..

குறைந்த  ஒளி..
நிறைந்த  மௌனம் ..
அறிவெனும் சுடர் ..

அவிழும் ஞானம் ..
ஞானத்தின் நிர்வாணம் ..
பகலின் நிழல் ..
நிழலின் வெளிச்சம்..

காமத்தின் போர்வை ..
கடல் எனும் துளி ..
மைதுனத்தின்  வியர்வை ..
தீரா பசி ..
அடங்கிவிட்ட  வறுமை..
அடங்கா கற்பனை ..
கவியின் வார்த்தை ..
விதவையின்  வர்ணம் ..
நான் எனும் கர்வம் ..
நீ எனும் நான் ..
நாம் எனும் கலவி ..
இனி இருள் எனது பேரண்டம் ..
நான் -பேரண்டத்தின் நிழல் !!


No comments:

Post a Comment