Saturday, December 11, 2010

நான்..

நான் அர்த்தமற்றவன்,
என்னுள் இருக்கும் -
  எதை
இழந்ததால் இப்பெயர் எனக்கு ,
எனை முத்தமிட்டால்
கோபித்துக்கொள்வேன் ,
வசை பாடினால்
வயிறு குலுங்க சிரிப்பேன் ,
இங்கே முத்தங்கள் -எதற்காக
அர்த்தமாகிவிட்டது ?
அனாவசிய எச்சத்தை -என்
சருமம்  ஏற்பதில்லை ,
எனை நோக்கி- எறியப்படும் 
வார்த்தைகளில் பொருள் உண்டு ,
ஏனெனில் -நான் அர்த்தமற்றவன்.
ஆறடி உருவம்
கறுத்த மயிர்களுக்கிடையே
சிவந்த தோலினம்,
நான் கர்வம் கொண்டவன் போல்
தோன்றலாம் ,
ஆனால் -நான் அர்த்தமற்றவன்.
அந்தரத்தில் நின்றுவிட்ட மழைத்துளி
வசை மொழி தூவுகிறது ,
நான் நியூட்டன் இல்லை ,
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ,
நான் அர்த்தமற்றவன்.
அர்த்தமற்றவனாய்  இருப்பதில்
அத்தனை சுகம் ,
எதனை நோக்கியும் -எனது
பயணம் இல்லை ,
எனது பயணத்திலும்
வழிகள் இல்லை ,
நான் அர்த்தமற்றவன்.
நான் மனிதன் .




No comments:

Post a Comment